பள்ளி மாணவர்களுக்கு கூல்லிப்: கடைக்கு சீல்
திண்டுக்கல்,; ஆத்துாரில் பள்ளி மாணவர்களுக்கு 'கூல்லிப்'விற்பனை செய்த கடைக்காரரை உணவுத்துறை அதிகாரிகள் பிடித்து கடைக்கு சீல் வைத்தனர்.
ஆத்துார் மாலப்பட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் மெஹ்ராஜ். அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்துகிறார். இதன் அருகில் பள்ளியும் செயல்படுகிறது. கடையில் 'கூல்லிப்'எனும் புகையிலை பொருளை யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்தார். பள்ளி நிர்வாகத்தினர் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணியிடம் புகாரளித்தனர். உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கூல்லிப்'புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் போது பிடித்தனர். இதையடுத்து அவரது கடைக்கு சீல் வைத்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?
Advertisement
Advertisement