நீதிபதி குடியிருப்பு கட்டடத்திற்கு பூமி பூஜை

உளுந்தூர்பேட்டை: உளுந்துார்பேட்டையில், நீதிபதிக்கான குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த கோர்ட் அருகில், நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில், சார்பு கோர்ட் நீதிபதிக்கான குடியிருப்பு ரூ.1.33 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. நேற்று நடந்த பூமி பூஜையில், மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குயில் தலைமை தாங்கினார்.
கலெக்டர் பிரசாந்த் பூமி பூஜையுடன் பணியை துவக்கி வைத்தார். மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலை வகித்தார். சார்பு நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம், குற்றவியல் கோர்ட் நீதிபதி கோமதி, அரசு வக்கீல் இளமுருகன், மூத்த வக்கீல்கள் ராவணன், அன்பழகன், காமராஜ், கிருபாபுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுனிதாவுக்கு சொந்த பணத்தை தருவேன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி பதில்
-
'அமெரிக்க வரியால் 'பிரிக்ஸ்'க்கு பாதிப்பில்லை' ஜெய்சங்கர் பளிச் பதில்
-
கல்லுாரி மாணவர்களிடம் மொபைல் போன் வழிப்பறி
-
மது விற்பனை 13வது முறையாக சிக்கிய பெண்
-
மாநகராட்சி பள்ளிகளில் 3,500 மாணவர் சேர்க்கை
-
குப்பை சேகரித்த கல்லுாரிகளுக்கு சிறப்பு பரிசு
Advertisement
Advertisement