செவிலியர் மர்ம மரணம்

சுத்தகுன்டே பாளையா; செவிலியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பெங்களூரு, சுத்தகுன்டே பாளையாவை சேர்ந்தவர் ஷில்பா, 35. இவர், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார்.

தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவரும், அவரது குடும்பத்தினரும் போலீசாரிடம் கூறினர்.

ஆனால், கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுத்தகுன்டே பாளையா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement