வேலை உறுதி திட்ட தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

பவ்லடம் : நான்கு மாதமாக சம்பளம் நிலுவையில் இருப்பதாக கூறி, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், பல்லடம் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் பழனிசாமி, பரமசிவம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக, நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும் வேலை செய்ததற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், அதிகாரிகளை கேட்டால் முறையான பதில் கூறுவதில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நுாறு நாள் திட்டப் பணியாளர்கள் பலரும் பங்கேற்று கோஷங்கள் எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு கூட்டம் துவக்கம்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்
-
தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.65,840!
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி
Advertisement
Advertisement