இந்தியாவில் நடக்குமா ஒலிம்பிக்? என்ன சொல்கிறார் ஐ.ஒ.சி., புதிய தலைவர்

புதுடில்லி: ''ஒலிம்பிக் நடத்தும் நாட்டினை தேர்வு செய்வது குறித்து சில யோசனைகள் உள்ளன. அடுத்த வாரம் இதை பகிர்ந்து கொள்கிறேன்,'' என ஐ.ஒ.சி., புதிய தலைவர் கிறிஸ்டி கவன்ட்ரி தெரிவித்துஉள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் சங்க (ஐ.ஒ.சி.,) புதிய தலைவராக ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை அமைச்சர், ஒலிம்பிக் நீச்சலில் இரு முறை தங்கம் வென்ற முன்னாள் வீராங்கனை கிறிஸ்டி கவன்ட்ரி 41, தேர்வு செய்யப்பட்டார்.
ஒலிம்பிக் தினமான ஜூன் 23ல் பொறுப்பேற்க உள்ள கிறிஸ்டி கவன்ட்ரி, 131 ஆண்டு ஐ.ஒ.சி., வரலாற்றில் முதல் பெண் தலைவர், முதல் ஆப்ரிக்கர் என பெருமை பெற்றார். இதனிடையே 2036ல் ஒலிம்பிக் போட்டி நடத்த இந்தியா முயற்சித்து வருவது குறித்து கிறிஸ்டி கவன்ட்ரி கூறியது:
ஒலிம்பிக் நடத்தும் நாடு குறித்த பேச்சுவார்த்தை விரைவுபடுத்தப்படும். இதற்கென உள்ள செயல்முறைகள், தற்போது நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களுக்கு இது தொடரும். இதில் அனைத்து உறுப்பினர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என நினைக்கிறேன். எனக்கும் சில யோசனைகள் உள்ளன. அடுத்த வாரம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.




மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு கூட்டம் துவக்கம்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்
-
தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.65,840!
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி