மாணவி மீது தாக்கு

விருத்தாசலம்; மாணவியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் மகள் வர்ஷினி, 13; சாத்துக்கூடல் கீழ்பாதி கிராமம் அரசு உயர்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் பள்ளியின் எதிர்புறம் உள்ள பெட்டிக்கடைக்கு சென்ற மாணவியை சாத்துக்கூடல் மேல்பாதி கிராமம் வீராசாமி மகன் விஜய், 30; தாக்கினார்.

கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, விஜயை கைது செய்தனர்.

Advertisement