சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலையில் பெண்களுக்கான பாலின உணர்திறன் மற்றும் வன்முறையை ஒழித்தல் தொடர்பான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி தொடங்கி வைத்து பேசினார். முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி வரவேற்றார். சட்டக்கல்லுாரி முதல்வர் முருகேசன், கலெக்டர் ஆஷா அஜித், குன்றக்குடி பொன்னம்பல அடிகள், வழக்கறிஞர் காந்தி, உதவி பேராசிரியர் சோனா, இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலத் தலைவர் சாமிதுரை, வழக்கறிஞர் சுமித்ரா பேசினர். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா நன்றி கூறினார்.

Advertisement