ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; மனித உரிமை ஆணையம் விசாரணை!

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில், ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் மார்ச் 18ம் தேதி அதிகாலை, 5:40 மணிக்கு மசூதியில் தொழுகையை முடித்து வெளியே வந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர் முத்தவல்லியாக இருந்து நிர்வாகம் செய்த தைக்கா நிலம் தொடர்பான சர்ச்சையில், அதே பகுதியில் வசிக்கும் தவ்பீக் தரப்பினரால் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில், கார்த்திக், 32, அக்பர் ஷா, 32, ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த தவ்பீக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். ஜாஹிர் உசேனை கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்ததாக, பிளஸ் 1 மாணவரான 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக, இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மாநில டிஜிபி மற்றும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வாசகர் கருத்து (3)
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
25 மார்,2025 - 16:53 Report Abuse

0
0
Reply
sugumar s - CHENNAI,இந்தியா
25 மார்,2025 - 14:54 Report Abuse

0
0
Reply
MUTHU - Sivakasi,இந்தியா
25 மார்,2025 - 13:28 Report Abuse

0
0
Reply
மேலும்
-
விரல் ரேகை பதித்தால் தான் இனி காஸ் சிலிண்டர் கிடைக்கும்!
-
ரூ.1 லட்சம் செலவு செய்தால் ரூ.20 லட்சத்திற்கு நகைகள் பறிக்க வேண்டும் என்பதே இலக்கு; ஈரானிய கொள்ளையன் வாக்குமூலம்
-
இந்தியா என்ன தர்மசாலையா: அமித் ஷா குடியேற்ற மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
-
வாகன துறையை கலங்கடித்த டிரம்பின் 25 சதவீத வரி விதிப்பு: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
-
பகிரங்கம்! 1974, 1976 அரசுகளே மீனவர் பிரச்னைக்கு காரணம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 'புட்டு' வைத்தார்
-
பயங்கரவாதிகளுடன் மோதல் மூன்று போலீசார் உயிரிழப்பு
Advertisement
Advertisement