வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா விமரிசையாக நடைபெறும்.
பங்குனி உத்திர விழா, நேற்று காலை 9:00 மணிக்கு கோட்டை வாயிற்படி வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 10:00 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது. ஏப்., 1ம் தேதி காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்க உள்ளது.
இதை தொடர்ந்து, 10 நாட்கள் காலை - மாலை உற்சவர் சோமஸ்கந்தர், வண்டார்குழலி அம்மன் திருவாலங்காடின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் ஏழாம் நாளான வரும் 7ம் தேதி கமலத்தேர் விழா நடைபெற உள்ளது.
வரும் 8ம் தேதி இரவு 10:00 மணிக்கு வடாரண்யேஸ்வரர் வண்டார்குழலியம்மன் திருக்கல்யாணம் நடைபெறும். கடைசி நாளான 10ம் தேதி பங்குனி உத்திரம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.
மேலும்
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்