போதை மாத்திரை பதுக்கி விற்ற நான்கு பேர் கைது
சென்னை:மெரினா பொது கழிப்பிடம் அருகே, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த, ஐஸ்ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையைச் சேர்ந்த கவுஷ்பாஷா, 20 என்பவரை பிடித்து, மெரினா போலீசார் விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். சோதனை செய்தபோது, 225 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்படி, ராயப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ், 18 என்பவரை கைது செய்த போலீசார், 305 போதை மாத்திரை, 1.19 லட்சம் ரொக்கம், 1 கத்தி, மொபைல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், ராமாபுரத்தில் போதை மாத்திரை வைத்திருந்த, திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த அமோஷ், 21, கலைச்செல்வன், 24 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 100 போதை மாத்திரை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
Advertisement
Advertisement