நிறம் மாறி மாசடைந்து வரும் நாகராஜகண்டிகை நீரோடை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், நாகராஜகண்டிகை கிராம எல்லையில், ஏரிகளுக்கான நீரோடை செல்கிறது. கால்நடை பயன்படுத்தி வரும் இந்த நீரேடை, தற்போது நிறம் மாறி மாசடைந்து வருகிறது.
இந்த நீரோடையின் கரையோரம் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதன் கழிவுநீர் நீரோடையில் வெளியேற்றப்படுவதால், தண்ணீர் மாசடைந்து வருவதாக, கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர், நீரோடை தண்ணீரை ஆய்வகத்திற்கு அனுப்பி, உரிய கள ஆய்வு மேற்கொண்டு, விதிமீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அடுத்தடுத்த நீர்நிலைகளை மாசடையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
Advertisement
Advertisement