பள்ளி மாணவியருக்கு தொந்தரவு சிறுவர்கள் கைது: வாலிபர் 'எஸ்கேப்'
திரு.வி.க.நகர்:புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கு 16 மற்றும் 15 வயதில், இரு மகள்கள் உள்ளனர். இவர்கள், பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் தட்டச்சு பயிற்சி முடித்து, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள், மாணவியர் இருவரிடமும், இன்ஸ்டாகிராம் ஐ.டி., கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் தர முடியாது எனக்கூறிய நிலையில், 1 அடி நீள கத்தியை காட்டி மிரட்டி சென்றுள்ளனர். மாணவியர் இதுகுறித்து தந்தையிடம் கூற, அவர் திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், ரெட்டேரியைச் சேர்ந்த கனிஷ்கர், 19, மற்றும் அவரது 16 மற்றும் 13 வயது நண்பர்கள் என தெரியவந்தது. இதையடுத்து, சிறுவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்த போலீசார், அவர்களை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தலைமறைவாக உள்ள கனிஷ்கரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்