வேட்டி - சட்டை ஆசைகாட்டி முதியவரின் நகை பறித்தவர் கைது

அயனாவரம்:செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன், 64. இவர், சென்னை, அயனாவரத்தில் உள்ள மகள் வீட்டில் தங்கி இருக்கிறார். கடந்த 22ம் தேதி காலை, அயனாவரம், புது தெரு வழியாக நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், லோகநாதனிடம் பேச்சு கொடுத்தார்.
பக்கத்து தெருவில் முதியோர்களுக்கு இலவச வேட்டி - சட்டை கொடுப்பதாக கூறி, இருசக்கர வாகனத்தில் லோகநாதனை அழைத்து சென்றார்.
சிறிது துாரத்தில் உள்ள ஜாயின்ட் ஆபிஸ் அருகில், வாகனத்தை நிறுத்தி, லோகநாதன் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழட்டி சட்டை பாக்கெட்டில் வைக்கும்படி கூறியுள்ளார்.
பின், சாலையோரத்தில் நின்று, சட்டைக்கு அளவு எடுப்பதாக கூறி கவனத்தை திசை திருப்பி, பாக்கெட்டில் இருந்த மோதிரத்தை எடுத்து தப்பினார்.
இதுகுறித்து, லோகநாதன் அயனாவரம் போலீசில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான, வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். இதில், கொசப்பேட்டையைச் சேர்ந்த கமலநாதன், 40, என்பது தெரிய வந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
கமலநாதன் மீது இதேபோல் ஏழு வழக்குள் இருப்பதும், கவனத்தை திசை திருப்பி திருடுவதில் விசாரணையில், கைத்தேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.
மேலும்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்