இறந்தவர் கண்கள் தானம்

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் இறந்த முதியவர் கண்கள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
புதுச்சேரி, லாஸ்பேட்டை, அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் ராமசாமி, 70. இவர் நேற்று மதியம் 1:00 மணி அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இதையடுத்து, அவரது மனைவி செல்வி, மகன்கள் மோகன், ஜெகநாதன், மகள் புவனேஸ்வரி அருண்பிரசாத் மற்றும் குடும்பத்தினர் ராமசாமியின் கண்களை தானம் செய்ய முன்வந்தனர்.
அதன்படி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் ஏற்பாட்டில், அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் அபூர்வா தலைமையிலான குழுவினர் இறந்தவரின் கருவிழிகளை தானமாக பெற்றனர்.
அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் , கருவிழிகளை தானம் செய்த குடும்பத்தினர், ஏற்பாடு செய்த இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார், ஆயுட்கல உறுப்பினர் கந்தசாமி, ஆறுமுகம், சுகாதார உதவியாளர் ஜவஹர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
மேலும்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்