சிறுவர் விருதுகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு
புதுச்சேரி: இளைஞர் அமைதி மையம் சார்பில், சிறந்த சிறுவர்களுக்கான அரிமதி தென்னகன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து நிறுவனர் அரிமதி இளம்பரிதி அறிக்கை:
இளைஞர் அமைதி மையம் சார்பில், ஆண்டுதோறும் கலை, இலக்கியம், விளையாட்டு மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் சிறுவர்களுக்கு அரிமதி தென்னகன் சாதனை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரியை சேர்ந்த 18 வயதிற்கு உட்பட சிறுவர்கள், உரிய ஆவணங்களோடு விண்ணப்பிக்கலாம். பெயர், முகவரி, துறை மற்றும் மொபைல் எண் ஆகிய தகவல்களோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் இளைஞர் அமைதி மையம், 72 முதல் குறுக்குத் தெரு, ஆனந்தரங்கர் நகர், புதுச்சேரி-8 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் சிறுவர்களுக்கு அரிமரி தென்னகன் 91வது பிறந்த நாளில் விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்