அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கடலுார்: மத்திய அரசின் விருது பெற்ற, கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால் நடத்தப்படும் 2024-25ம் ஆண்டிற்கான இன்ஸ்பயர் மானக் விருதை, கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு சுகன், 7ம் வகுப்பு நித்திஷ் ஆகியோர் வென்றனர்.
விருதுடன் அடுத்தகட்ட ஆய்வுக்கான ஊக்கத்தொகை மற்றும் உயர்கல்விக்கான சூப்பர் நியூமரரி இடங்களுக்கு தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டனர். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று விருது பெற்ற மாணவர்களை, பள்ளி தலைவர் சிவக்குமார், முதல்வர் பாண்டே பாராட்டினர். அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் உள்ள அடல் ஆய்வகம், தேசிய அளவிலான போட்டியில் மாணவர்கள் வெற்றி பெறக் காரணமாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
Advertisement
Advertisement