ஆதிதிராவிடர் நலத்துறை குறைகேட்பு சிறப்பு முகாம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் குறைகேட்பு சிறப்பு முகாம் நடந்தது.

கண்டாச்சிபுரம் தாலுகாவில் வசிக்கும் புதிரை வண்ணார் இன மக்களுக்கான சிறப்பு முகாமிற்கு ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தாசில்தார் முத்து முன்னிலை வகித்தார். ஆதார், ஜாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கூடுதல் தாசில்தார் கீதா, வருவாய் ஆய்வாளர் ராணி பவானி, கிராம நிர்வாக அலுவலர் பிரசாந்த் பங்கேற்றனர்.

Advertisement