கஞ்சா கடத்திய 2 பேர் கைது

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி எஸ்.ஐ., மணிகண்டன் மற்றும் போலீசார் தேனி - மதுரை ரோட்டில் டி.பொம்மிநாயக்கன்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படி சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தின் பவுச்சில் பிளாஸ்டிக் பையில் 450 கிராம் எடையில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. விற்பனைக்காக கஞ்சாவை வெளியூரில் இருந்து வாங்கி வருவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற தூத்துக்குடி வடக்கு ரத வீதியைச் சேர்ந்த முருகன் 54, கூடலூர் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தெய்வேந்திரன் 59, இருவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement