சிறுமிக்கு பாலியல் தொல்லை தாத்தாவுக்கு போலீஸ் வலை
மேட்டுப்பாளையம் : பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தாத்தா முறை உறவினர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது பள்ளி சிறுமி. 50 வயது தாத்தா முறை உறவினரான ஒருவர், வீட்டில் சிறுமி தனியாக இருக்கும் போது, அவரிடம் பழகும் விதம் தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, நேற்று முன் தினம் சைல்டு ெஹல்ப் லைனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள், சிறுமுகை போலீசாருடன் நேரில் சென்று சிறுமியிடம் விசாரித்தனர்.
விசாரணையில், சிறுமி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். தாத்தா முறை உறவினர், தன்னை மிரட்டி மூன்று முறை உடலுறவு வைத்துக் கொண்டார் என தெரிவித்தார்.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீசார் வருவதை அறிந்த தாத்தா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.----
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்