மனித உரிமை விழிப்புணர்வு கூட்டம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பரமக்குடியில் நடந்தது.
பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமை வகித்தார். பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., தங்க கிருஷ்ணன், புள்ளியியல் ஆய்வாளர் முருகலிங்கம், ஆதிதிராவிடர் நல கமிட்டி உறுப்பினர் செல்வி பேசினர்.
அப்போது அனைவரும் சாதி, மதம், இனம், மொழி, பொருளாதார வேறுபாடுகளை களைந்து ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கையை பின்பற்ற வேண்டும். சமூக நீதி சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றனர்.
கூட்டத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பரமக்குடி தாலுகா இன்ஸ்பெக்டர் காளிராஜன் நன்றி கூறினார்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்