விசைத்தறி பிரச்னைக்கு தீர்வு காண ஜவுளித்துறை செயலரிடம் மனு

கருமத்தம்பட்டி : விசைத்தறி மற்றும் ஜவுளி தொழில் நெருக்கடிகளை களைய கோரி, மத்திய ஜவுளித்துறை செயலாளரிடம் பா.ஜ., நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விசைத்தறி மற்றும் ஜவுளி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை களைய கோரி, கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் மோகன் மந்திராஜலம், பொதுச்செயலாளர் சத்தியமூர்த்தி, பரமசிவன், வடக்கு ஒன்றிய தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், டெல்லியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கின் முகாம் அலுவலகத்தில், ஜவுளி துறை செயலாளரிடம் மனு அளித்தனர்.
விசைத்தறி கூடங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கும் வகையில், சிறப்பு சூரிய ஒளி மின் திட்டத்தை மானியத்துடன் அமல்படுத்த வேண்டும், ஜவுளி துறையில் உள்ள நெருக்கடிக்கு தீர்வு காண சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், என, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்