குப்பை வண்டியில் தீ

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் 300க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களும் 150-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

மாநகராட்சியில் தள்ளு வண்டி மூலம் குப்பை சேகரித்து வந்த நிலையில், தற்போது, தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் உள்ளது.

இந்நிலையில் நேற்று, பேட்டரி வாகனத்தில் சார்ஜ் போடும்போது திடீரென்று புகை வந்து தீப்பிடித்தது.

இதைப் பார்த்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

Advertisement