புது பஸ் ஸ்டாண்டில் செயல்படாத புதன்கிழமை சந்தை
விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் துவங்கப்பட்ட புதன் கிழமை சந்தை துவங்கிய முதல் இரு வாரங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில், அதற்கு பின் செயல்படவே இல்லை.
விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் 2024 ஆக.21 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கு பின் பஸ்களை கொண்டு வர வழித்தடங்கள், வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
நகராட்சி நிர்வாகம் சார்பில் கூடுதல் முனைப்பாக புதன்கிழமை தோறும் சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. துவங்கிய முதல் இருவாரங்களில் மட்டும் இங்கு செயல்பட்ட சந்தை அதற்கு பின் செயல்படவே இல்லை.
புது பஸ் ஸ்டாண்டில்பஸ் ஏறி செல்வோருக்குபயன்படும் வகையில் தான் இந்த சந்தை கொண்டு வரப்பட்டது. தற்போது செயல்படாமல் உள்ளது.
இதே போன்றதொரு காய்கறி சந்தைகள் மகப்பேறு மருத்துவமனை எதிர்ப்புறம் போட்டு வைக்கப்பட்டுள்ளது. இது காலை, மாலை நேரங்களில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்