பொது மாமல்லபுரம் அருகே இரவில் பெண் மாயம்

கொக்கிலமேடில், காணாமல் போன பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம்,மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி சங்கீதா, 36.
இவர் மனநலம் பாதிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதற்கு முன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது காணாமல் போய், வேறு ஊரில் மீட்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜன., 29ம் தேதி இரவு வீட்டில் உறங்கியவர், நள்ளிரவில் வெளியேறி காணாமல் போனார்.
அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சுரேஷ், இதுகுறித்து மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் வாயிலாக, அப்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
-
கச்சத்தீவை மீட்க வேண்டும்; சட்டசபையில் முதல்வர் தனி தீர்மானம்
-
இன்ஸ்டாகிராமில் சேட்டை பதிவு: நெல்லையில் வாலிபர்கள் கைது
-
இறந்தவரின் பர்சில் பணம் லபக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
-
மஹா.,வில் சாலை விபத்து; 5 பேர் பலி; 20 பேர் காயம்!
Advertisement
Advertisement