நீலகிரி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை: கலெக்டர் அறிவிப்பு

ஊட்டி: அரசு பஸ்கள், ஆம்புலன்ஸ், நீலகிரி மாவட்ட வாகனங்கள், நீலகிரி மாவட்டத்தில் வசிப்போருக்கு இ-பாஸ் தேவையில்லை என்று மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, இன்று (ஏப்., 1) முதல் ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும், இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும் அனுமதிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம், இன்று (ஏப்.1) முதல் அமுல்படுத்தி உள்ளது.
அதன்படி, கூடலூரை ஒட்டிய தமிழக - கேரளா, கர்நாடக எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனையை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இப்பணியின், காரணமாக, தமிழக - கேரளா எல்லையான நாடுகாணி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், கல்லார் இ பாஸ் சோதனை சாவடியில் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் எஸ்.பி., நிஷா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கலெக்டர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தினமும் 6000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. அரசு பஸ்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், நீலகிரி மாவட்ட வாகனங்கள், நீலகிரி மாவட்டத்தில் வசிப்போருக்கு இ-பாஸ் தேவையில்லை. மதியம் 1 மணி நிலவரப்படி (ஏப்.1) தற்போது வரை 2,500 வாகனங்கள் வந்துள்ளன. இந்த நடைமுறை நன்றாக சென்றுக்கொண்டிருக்கிறது.
கல்லார் இ-பாஸ் சோதனை சாவடியில், பூம் பேரியர் அமைக்க உள்ளோம். இ-பாஸ் பெற்ற வாகனங்களின் நம்பர் பிளேட் வாயிலாக ஆட்டோமெட்டிக்காக, செக் செய்யும் வகையில் இந்த பூம் பேரியர் அமைய உள்ளது. அடுத்த வாரம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதனால் பணியில் ஊழியர்கள் அதிகம் தேவைப்பட மாட்டார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. மற்ற செக்போஸ்ட்களிலும் நடைமுறைப்படுத்த உள்ளோம்.
வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு இல்லை என சொல்ல முடியாது. அருகில் உள்ள வெளிமாநில கலெக்டர்கள், போலீஸ் உள்ளிட்டோருக்கு இ-பாஸ் தொடர்பாக அறிவுறுத்தி உள்ளோம்.
சமூக வலைதளங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். நீலகிரி மாவட்டத்தில் மக்களின் வசதிக்காக 97 வாட்டர் ஏ.டி.எம்.,கள் அமைத்துள்ளோம். பிளாஸ்டிக் வாட்டர் பாட்டீல்கள் கொண்டுவர வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
ஐ ஆம் ஜஸ்ட் 98
-
வக்ப் வாரிய விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது; பார்லியில் அமித் ஷா உறுதி!
-
ஒன்றுபட்ட அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி; சைதை துரைசாமி வலியுறுத்தல்
-
லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்
-
பிரியாணி, சவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி; பிலால் ஹோட்டலுக்கு சீல்
-
அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை சந்திப்பு