'ஏசி'யில் காப்பர் கம்பி திருடிய வாலிபர் கைது

சைதாப்பேட்டை,
சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஜரினா பேகம், 50. கடந்த 30ம் தேதி, இவர் வீட்டில் இல்லாதபோது, 'ஏசி'யில் இருந்த காப்பர் கம்பி திருடப்பட்டது.

இதுகுறித்த புகாரின்படி, சைதாப்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், தி.நகர், காந்திபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன், 19, 'ஏசி'யில் இருந்த காப்பர் கம்பியை தெரிந்தது.

நேற்று, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement