ஊராட்சி அலுவலக கூரையில் கான்கிரீட் பெயர்ந்து வரும் அவலம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சியில், மல்லிகாபுரம், படூர், அமராவதிபட்டணம், காட்டாங்குளம், விழுதவாடி ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில், காட்டாங்குளம் கிராமத்தில், ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்தோர் வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவைகளை பெற வந்து செல்கின்றனர்.

இந்த ஊராட்சி அலுவலக கட்டடம், 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது, ஊராட்சி அலுவலக கட்டடம் முறையான பராமரிப்பு இல்லாமல், கட்டட கூரை சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், அலுவலகத்திற்கு வருவோர், அச்சத்துடனே வந்து செல்கின்றனர்.

எனவே, பழுதடைந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement