சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 50 வயது நபருக்கு ஆயுள் தண்டனை

சென்னை, கொடுங்கையூரில் வாடகை வீட்டில் வசிக்கும் தம்பதிக்கு, பெண் குழந்தை உள்ளது. வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளர், கடந்த 2015ல் தம்பதியின் 12 வயது பெண் குழந்தையை கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் போலீசார், இந்திய தண்டனை சட்டம், 'போக்சோ' சட்டப் பிரிவுகளின் கீழ், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக, இந்த வழக்கு விசாரணை, சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது. போலீசார் சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.

விசாரித்த நீதிபதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது எனக்கூறி, அவருக்கு போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனையும், 35,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தொகையை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும்; தமிழக அரசு இழப்பீடாக 15 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement