மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் நத்தப்பேட்டை பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாயை முறையாக பராமரிக்காதாதால், ஆதிதிராவிடர் நல அரசு துவக்கப்பள்ளி ஒட்டியுள்ள பகுதியில் கால்வாயில் மழைநீர் செல்லும் நீர்வழித்தட பாதையில் செடி, கொடிகள் கோரைபுற்கள் புதர்போல வளர்ந்துள்ளன.

இதனால், மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, மழைநீர் நீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதியினர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement