ஒருநாள் முன்னதாக ஏப்., 29ல் சட்டசபை நிறைவு
சென்னை:''தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர், ஏப்ரல் 30ம் தேதிக்கு பதிலாக 29ல் நிறைவடையும்,'' என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு:
ஏப்ரல் 21ல் நடக்கவிருந்த மின்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை மானிய கோரிக்கை மீதான விவாதம் 22ம் தேதியும், அன்று நடப்பதாக இருந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் 21ம் தேதியும் நடக்கும்.
ஏப்ரல் 28ல் நடப்பதாக இருந்த பொதுத்துறை, சுற்றுச்சூழல், நிதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் 29ம் தேதி நடக்கும். ஏப்ரல் 29, 30ல் நடப்பதாக இருந்த காவல், தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், 28, 29ம் தேதிகளில் நடக்கும். ஏப்ரல் 30ல் சட்டசபை கூட்டம் இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டம், மார்ச் 15ல் துவங்கி நடந்து வருகிறது; ஏப்., 30ல் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்னதாக ஏப்., 29ல் முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு; வெளியானது அறிவிப்பு
-
தமிழக பா.ஜ., தலைவரானார் நயினார் நாகேந்திரன்
-
லக்னோவுக்கு 181 ரன்கள் இலக்கு; கில், சாய் சுதர்சன் அரைசதம்
-
பிரபலங்கள் படங்களை வெளியிட்டு மோசடி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
-
சிரோமணி அகாலி தள தலைவராக மீண்டும் தேர்வானார் சுக்பீர் பாதல்
-
மகா கேவலமாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்கிறார் பொன்முடி