தபால் நிலைய அலுவலர் மாயம்; டெபாசிட்தாரர்கள் அதிர்ச்சி
சூலுார்; தபால் நிலைய அலுவலர் மாயமானதால், டெபாசிட்தாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுல்தான்பேட்டை அடுத்த பூராண்டாம்பாளையத்தில், கிளை தபால் நிலையம் உள்ளது. இங்கு அலுவலராக புதுக்கோட்டையை சேர்ந்த பாலாஜி, 30 என்பவர் பணியாற்றி வந்தார். சுற்றுவட்டார மக்கள், சேமிப்பு மற்றும் டெபாசிட் திட்டங்களில் சேர, பணம் மற்றும் பாஸ் புத்தகங்களை கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக , பாலாஜி அலுவலகத்துக்கு வராமல் மாயமாகி உள்ளார். இதனால், பணம் டெபாசிட் செய்த மக்கள், அதிர்ச்சி அடைந்தனர்.
சுல்தான்பேட்டை தபால் நிலைய அதிகாரிகளிடம், சேமிப்பு பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,என, முறையிட்டனர். போலீசில் புகார் அளிக்க, அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து, டெபாசிட் தாரர்கள் சுல்தான்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்: பிரதமர் மோடி உறுதி
-
மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு