தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

தைபே: தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
தைவான் நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது உண்டு. 1999ம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பலியானது நினைவிருக்கலாம். 2024ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 பேர் பலியாகினர்.
இந்நிலையில் தலைநகரான சீன தைபேயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
வடகிழக்கு கடற்கரையில் இலனுக்கு தென்கிழக்கில் 21 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் கூறி உள்ளது. நிலநடுக்கத்தின் போது ஏதேனும் உயிரிழப்போ, சேதாரமோ ஏற்பட்டதா என்ற எந்த தகவலும் இல்லை என்றும் அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும்
-
பிரீமியர் லீக்: மும்பை அணி நிதானம்
-
ஒப்பந்த பட்டியலில் இளம் வீரர்கள் * அபிஷேக், நிதிஷ், ஹர்ஷித் ராணா வாய்ப்பு
-
செஸ்: ஹம்பி, திவ்யா அபாரம்
-
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
வர்த்தக போர் எதிரொலி: சந்திப்பிற்கு விரும்பும் சீனா: சொல்கிறார் டிரம்ப்
-
10 ஆயிரம் பேர்... போலீசாரின் துப்பாக்கி பறிப்பு... மே.வங்க கலவரம் குறித்து வெளியான பகீர் தகவல்