பூட்டை சாலையில் விபத்து அபாயம்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே, வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

சங்கராபுரம்,பூட்டை சாலையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, தீயணைப்பு நிலையம்,அரசு பாலிடெக்னிக் கல்லுாரி ஆகியவை உள்ளன.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் உள்ள, வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அழிந்து விட்டது. அதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல அரசம்பட்டு, பாலப்பட்டு செல்லும் சாலையில் உள்ள வேகத்தடைகளிலும், இதே பிரச்னை உள்ளதால், விபத்து அபாயம் தொடர்கதையாகி வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' அந்த சாலைகளில், கருப்பு, வெள்ளை பெயிண்ட் அடித்து, வேகத்தடை விளக்க குறியீடு போர்டு வைக்க வேண்டும். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.

Advertisement