உருவானது காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் ஏப்ரல்., 12ம் தேதி வரை மழை நீடிக்கும்!

சென்னை: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உருவானது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் ஏப்., 12ம் தேதி வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கும் நிலையில், கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கடலோர மாவட்டங்களில், நாளை முதல், 10ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், ஆந்திரா, ஒடிசா வரையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், ஏப்., 10ம் தேதி வரை, அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை, 36 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
07 ஏப்,2025 - 15:22 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement