சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; மதபோதகரை தேடி வரும் போலீசார்

கோவை: கோவை, கிராஸ்கட் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தின் மதபோதகர் ஜான் ஜெபராஜ், 37. கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் குடியிருந்து வருகிறார். 11 மாதங்களுக்கு முன், இவர் தனது வீட்டில் விருந்து நடத்தினார். விருந்தில் பங்கேற்ற, 14, 17 வயது சிறுமிகளுக்கு, ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமிகளிடம், இதுகுறித்து யாரிடமும் கூற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் 14 வயது சிறுமி அளித்த தகவலின்பேரில், சைல்டு லைன் அமைப்பினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக உள்ள ஜான் ஜெப ராஜை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து (1)
kamal 00 - ,
08 ஏப்,2025 - 09:18 Report Abuse

0
0
Reply
மேலும்
-
துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு
-
டிரம்ப், புடின் ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப நெருக்கம்: சீமான் கலகலப்பு
-
மரணத்தை பரிசாக தந்த பிறந்தநாள் பேனர்: மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் இருவர் பலி
-
துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்புங்க: அரசுக்கு சொல்கிறார் ராமதாஸ்
-
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு; ஏப்ரல் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
-
சபாநாயகர் செயல்பாடு ஒருதலைபட்சமானது: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
Advertisement
Advertisement