உக்ரைன் ராணுவத்திடம் சிக்கிய சீனர்கள்; ரஷ்யா சார்பில் போரில் ஈடுபட்டது அம்பலம்

கீவ்: ரஷ்யா சார்பில் போரில் ஈடுபட்ட சீனர்கள் இருவர் தங்கள் நாட்டு ராணுவத்திடம் சிக்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா, அந்நாட்டின் கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளது. பல்வேறு பகுதிகள் மீது தொடர்ந்து தாக்குதலும் நடத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரில் ரஷ்ய ராணுவம் சார்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நீண்ட காலமாக புகார் உள்ளது.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடுவோரை ஏமாற்றி அழைத்து வந்து போரில் ஈடுபடுத்துவதாகவும் ரஷ்யா மீது குற்றச்சாட்டு உள்ளது.ஆனால், ரஷ்யாவின் கூட்டாளி நாடுகளான வடகொரியா, சீனா, பெலாரஸ் போன்ற நாடுகள், தெரிந்தே ரஷ்ய ராணுவத்துக்கு ஆட்கள் சப்ளை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ரஷ்யா ராணுவத்துக்காக போரிட்ட சீனர்கள் இருவரை உக்ரைன் ராணுவம் கைது செய்துள்ளது.
இதை அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.ஐநா பாதுகாப்பு சபையின் பொறுப்புள்ள நிரந்தர உறுப்பினர் என்ற நம்பகத்தன்மையை இழக்கும் வகையில் இந்த செயல்பாடு அமைந்துள்ளது. இது தொடர்பாக சீன அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.








மேலும்
-
குட் பேட் அக்லி வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை புகார்; போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறியதாக குற்றச்சாட்டு
-
அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
-
"நானும் அரசியலுக்கு வருவேன்" - ராபர்ட் வாத்ரா
-
ஒளி மற்றும் மரபு
-
கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம்; மாநில சுயாட்சி தீர்மானம் குறித்து ஜெயக்குமார் விமர்சனம்
-
டூவீலரில் சாகசம் செய்து ரீல்ஸ்; தேசிய நெடுஞ்சாலையில் அத்துமீறிய வாலிபர்கள் கைது