மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்

திருபுவனை, : சமூக நலத்துறை சார்பில், திருபுவனை தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் மற்றும் மாதாந்திர நிதி உதவி வழங்கப்பட்டது.

திருபுவனை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு சமூக நலத்துறையின் மூலம் ஸ்கூட்டர் மற்றும் 10 பேருக்கு மாதாந்திர நிதி உதவியை வழங்கினார்.

சமூக நலத்துறை இணை இயக்குநர் ஆறுமுகம், கண்காணிப்பாளர் திருமுருகன், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement