தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்

12

விருத்தாசலம்: உடல்நலக்குறைவால் தந்தை உயிரிழந்த சடலம் முன்பு மகன் கண்ணீர் மல்க திருமணம் செய்து கொண்ட நிகழ்வு விருத்தாசலம் பகுதியில் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கவணை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு அப்பு என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக, செல்வராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று அவர் உடல்நல குறைவால் காலமானார்.

தந்தை மறைவையடுத்து கதறி அழுத அப்பு, அவரது சடலத்தின் முன்பு நின்று கண்ணீர் மல்க விஜயசாந்தி என்பரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து தந்தையின் பாதங்களை தொட்டு ஆசி பெற்றனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதன் பிறகு, செல்வராஜ் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

Advertisement