ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பிரிவு துவக்கம்

புதுச்சேரி : ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், சிறுநீரகவியல் வெளிப்புற சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மேம்படுத்தப்பட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் சிறுநீரகவியல் வெளிப்புற சிகிச்சை புதிய பிரிவை, மருத்துவ கண்காணிப்பாளர் ஐயப்பன் நேற்று துவக்கி வைத்தார்.
மகளிர் சிறப்பு மருத்துவர் வல்சா டயானா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, இந்திராகாந்தி அரசு மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் சுதாகர் சிறப்புரை ஆற்றினர். மருத்துவ உள்ளிருப்பு அதிகாரி ரொசாரியோ உட்பட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வெளிப்புற சிகிச்சை பிரிவு வாரந்தோறும் செவ்வாய் கிழமையில், 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை இயங்கும். இங்கு, சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர்களிடம் பெண்கள் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை பெறலாம்.
தொடர்ந்து மருத்துவ கருத்தரங்கு நிகழ்ச்சியில், மருத்துவமனையில், பணிபுரியும் ஊழியர்களுக்கு அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிக்கு உதவி புரிவதற்கு பயற்சி அளிக்கப்பட்டது.
மேலும்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை