மாணவியை ஏமாற்றி செயின் பெற்ற வேன் டிரைவர் மீது வழக்கு
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்ணின் 14 வயது மகள் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.
இவர் கிராமத்தில் இருந்து தினமும் பள்ளி வேனில் சென்று வந்துள்ளார். மார்ச் 24 ல் மகளின் கழுத்தில் அவரது தாயார் 2 பவுன் செயினை அணிவித்து பள்ளிக்கு அனுப்பினார். மார்ச் 28 ல் செயினை காணவில்லை என மகளிடம் தாயார் கேட்டுள்ளார். அப்போது செயினை வேன் டிரைவர் பாண்டியிடம் கொடுத்ததாக கூறினார். இது குறித்து பள்ளி நிர்வாகம் மூலம் பாண்டி குடும்பத்தினரிடம் நகையை கேட்டதற்கு திருப்பி தரவில்லை. இது குறித்து மாணவியின் தயார் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வேன் டிரைவர் பாண்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
Advertisement
Advertisement