இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான் பயங்கரவாதி தஹாவூர் ராணா: பாகிஸ்தான் சொல்வது என்ன

இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணா, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான். அவன், தங்களது நாட்டை சேர்ந்தவன் இல்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்நிலையில் பயங்கரவாதி தஹாவூர் ராணா,டில்லி பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான்.
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானில் பிறந்து கனடாவில் வசித்த தஹாவூர் ராணா என்ற பயங்கரவாதி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான். மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, தஹாவூர் ராணா இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான். அவனை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பாதுகாப்புடன் டில்லி அழைத்து வந்தனர். அவனை, டில்லி திஹார் சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அவனிடம் நடக்கும் விசாரணையில் மும்பை தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணா,டில்லி பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான்.











மேலும்
-
தேர்தல் கூட்டணி பற்றி பேசக் கூடாது: கட்சியினருக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
-
ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 38 பேர் பலி; 102 பேர் காயம்
-
ராமேஸ்வரம் ரிசார்ட்டில் ரூ.30 கோடி மதிப்புள்ள 60 அறைகளுக்கு சீல்; அமலாக்கத்துறை நடவடிக்கை
-
யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை சேர்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
-
17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: டில்லியில் பதட்டம்; பலத்த பாதுகாப்பு
-
6 நிமிடத்தில் அரும் பெரும் உயிர் பிழைத்தது; சினிமா பாணியில் செயல்பட்ட போலீசார்