17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: டில்லியில் பதட்டம்; பலத்த பாதுகாப்பு

புதுடில்லி: டில்லியில் உள்ள சீலம்பூரில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை, செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் நிலவியது.
வடகிழக்கு டில்லியின் சீலம்பூரில் 17 வயது சிறுவன் நேற்று இரவு கத்தியால் குத்திக் கொல்லப்பட்டான். இறந்த சிறுவன் தனது குடும்பத்துடன் நியூ சீலம்பூரில் வசித்து வந்தார்.
தாக்குதலை நடத்திய பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட போது சிறுவன் இறந்து விட்டான் என்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
நேரில் பார்த்தவர்களும், உள்ளூர்வாசிகளும் கொலை செய்தது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதால், அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இந்தக் கொடூரமான கொலை, அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தைத் தூண்டியது. அவர்கள் வீதிகளில் இறங்கி, சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டில்லியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.













மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்