அசாமில் ரூ.24.32 கோடி போதைப் பொருள் பறிமுதல்: நடவடிக்கை தொடரும் என்கிறார் அமித்ஷா

6

புதுடில்லி: போதைப்பொருட்களுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகள் தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இது குறித்து,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முழு பலத்துடன் போதைப்பொருள் கும்பல்களை ஒழித்து வருகிறது.


போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்குவதற்கான அரசின் நடவடிக்கைகளில் அசாமில் ரூ.24.32 கோடி மதிப்புள்ள 30.4 கிலோ மெத்தமெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்களுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகள் தொடரும். இந்த பெரிய நவடிக்கை எடுத்து என்.சி.பி, அசாம் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப் க்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement