ஹிந்து குறித்து அவதூறு பேசினால் தண்டனை; அமெரிக்காவில் முதன் முறையாக புது சட்டம்

ஜார்ஜியா: ஹிந்து மதம் மற்றும் ஹிந்துக்கள் குறித்து அவதூறு பேசினாலோ வேறு சூழலை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதா அமெரிக்காவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹிந்து மதத்திற்கு புகழாரம்
இம்மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் சுவாண்ட் டில், கிளிண்ட் டிக்சன், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜேசன் எஸ்டீவ்ஸ், இம்மானுவேல் ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து இந்த மசோதாவை செனட் சபையில் அறிமுகம் செய்தனர்.
" சமீபத்திய ஹிந்துக்கள் மீதான வெறுப்பை தவிர்க்க இந்த புது சட்டத்தை அறிமுகம் செய்வதாகவும், இது தொடர்பாக மகிழ்வும், பெருமையும் கொள்கிறோம்" என்றும் சபையில் தெரிவித்தனர். உலகில் 100 கோடிக்கும் மேலானவர்கள் பின்பற்றும் ஹிந்து மதம் என்றும், இது உலகில் பழமையான மதங்களில் ஒன்று என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா, மதம், இனம், நிறம், அயல் நாட்டவர் என்ற வேறுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் வரும். தொடர்ந்து சட்டம் நிறைவேற்றப்பட்டதும் விரைவில் அமலுக்கு வரும். இதனை தொடர்ந்து ஹிந்து மதம் ஹிந்துக்கள் மீதான வெறுப்பு செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியிலான கடும் நடவடிக்கைள் பாயும். தண்டனை குறித்த விவரம் ஏதும் வெளியாகவில்லை.
ஹிந்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஒரு புது சட்டம் இயற்றப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த பெருமையை ஜார்ஜியா பெறுகிறது. இதனை ஹிந்து அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.
முஸ்லிம் மதம் குறித்து அவதூறு செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் அளவுக்கு ஆப்பிரிக்க சட்டத்தில் இடம் உள்ளது.










மேலும்
-
வக்ப் சட்டத்தை எதிர்த்து மே.வங்கத்தில் மீண்டும் வன்முறை: போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு
-
நீர், உலக உயிர்களுக்கு இறைவன் அளித்த வரப்பிரசாதம்: தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்
-
சென்னையில் அமைச்சர் விழாவில் போலீஸ்காரர் மீது தி.மு.க.வினர் தாக்குதல்; அண்ணாமலை கண்டனம்
-
பிரீமியர் லீக்: லக்னோ அணி பேட்டிங்
-
மலேசிய முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி காலமானார்
-
14 ஆண்டு சபதம் நிறைவு செய்த ராம்பால் காஷ்யப் பிரதமருடன் சந்திப்பு