குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடிய தண்ணீர்

ராமாபுரம்:வளசரவாக்கம் மண்டலம், 154 வது வார்டு ராமாபுரத்தில் நாயுடு சாலை உள்ளது. இது, வளசரவாக்கம், ராமாபுரம் பகுதிகளை இணைக்கிறது.

இச்சாலை வழியாக, அப்பகுதியில் உள்ள உட்புற தெருக்களுக்கு, குடிநீர் வழங்கும் குழாய் செல்கிறது.

இந்த வார்டில் சமீபத்தில் கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன.

இந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று காலை முதல் நாயுடு சாலையில் குடிநீர் கசிந்து ஓடியது.

இதில், பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணானது. குழாய் உடைப்பை கண்டறிந்து, குடிநீர் வாரியம் சீர்செய்ய வேண்டும் என, கோரிக்கை அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement