கேரளாவில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்த பரிதாபம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அருகே வனத்தில், தேன் சேகரிக்க சென்ற இருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த சதீஷ் மற்றும் அம்பிகா என்பது தெரியவந்தது. இவர்கள் அதிரப்பள்ளியில் தற்காலிக குடிசைகளில் வசித்து வந்தனர்.
ஒரு நாள் முன்புதான், அதிரப்பள்ளியில் யானை தாக்கியதில் செபாஸ்டியன் (20) என்ற பழங்குடி இளைஞர் உயிரிழந்தார். அதே பகுதியில் காட்டு யானை தாக்கி இன்று (ஏப்ரல் 15) மேலும் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வியாசர்பாடி சிறுமி கர்ப்பம் சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு
-
புகார் பெட்டி ..
-
நான்கு மாதங்களாக கழிப்பறைக்கு பூட்டு உபாதை கழிக்க பெண் போலீசார் தவிப்பு
-
மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
-
மாணவர்கள், பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கி விழிப்புணர்வு
-
சென்னை - ராஜஸ்தான் சிறப்பு ரயில்களில் 2 கூடுதல் 'ஏசி' பெட்டி
Advertisement
Advertisement