பிறந்த 5 நாளில் குழந்தை பலி
ஓசூர்: தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி, 30. கட்டட மேஸ்திரி; இவரது மனைவி கங்காதேவி. இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான கங்காதேவிக்கு கடந்த, 5 நாட்களுக்கு முன், ஓசூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
சிகிச்சையில் இருந்த அவர் கடந்த, 11 இரவு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து துாங்க வைத்தார். நேற்று முன்தினம் அதிகாலை, 3:50 மணிக்கு பார்த்தபோது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அசைவின்றி இருந்தது. டாக்டர்கள் வந்து பரிசோதனை செய்தபோது, குழந்தை இறந்தது தெரியவந்தது. ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போயிங் விமானங்களை வாங்க சீனா தடை
-
ஏப்.,17 ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
-
2025ல் கூடுதல் மழைப்பொழிவு: இந்திய வானிலை மையம் கணிப்பு
-
கற்பனை உலகில் வாழும் முதல்வர் ஸ்டாலின்; உயர்நிலைக் குழுவை விமர்சித்த அண்ணாமலை
-
பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
டிரம்ப் உத்தரவு எதிரொலி: நாசாவில் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி பணி நீக்கம்
Advertisement
Advertisement