டிரம்ப் உத்தரவு எதிரொலி: நாசாவில் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி பணி நீக்கம்

24

வாஷிங்டன்: நாசாவில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அதிகாரி நீலா ராஜேந்திரா பணி நீக்கம் செய்யப்பட்டார்.


அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அரசில் தேவையற்ற செலவுகளை குறைக்கவும், நிர்வாகத்தை சீர்படுத்தவும் எலான் மஸ்க் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இக்குழு அளித்த பரிந்துரைப்படி பல துறைகள் மூடப்பட்டன. பல அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பல்வேறு துறைகள் பணிகளை நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டன.
இந்த உத்தரவு காரணமாக, நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்துறை(டிஇஐ) நீலா ராஜேந்திராவின் பதவி பறிபோனது.


இந்த துறையை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து நீலா ராஜேந்திராவின் பதவியை காப்பாற்ற, அவர் வகித்த பதவி ' Head of Office of Team Excellence and Employee Success' என மாற்றப்பட்டது. ஆனாலும், இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனை டிரம்ப் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து நீலா ராஜேந்திரா பணி நீக்கம் செய்யப்பட்டதாக, தனது ஊழியர்களுக்கு இமெயில் மூலம் நாசா தெரியப்படுத்தி உள்ளது.

Advertisement