விடைத்தாள் திருத்தும் பணிக்கு 19ம் தேதி விடுப்பு தரப்படுமா?

சென்னை : 'பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு, வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல், பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் 18ம் தேதி புனித வெள்ளி, 20ம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக, வெளியூர் செல்லும் கிறிஸ்துவ ஆசிரியர்கள், இடையில் ஒருநாள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவதில் சிரமம் உள்ளது.
அதனால், '19ம் தேதியன்று, விடைத்தாள் திருத்தும் பணிக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தேர்வுத் துறையிடம் வலியுறுத்திஉள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா; இ.பி.எஸ்., 'பளீச்' பதில்!
-
4 மாதங்களில் 85,000 இந்தியர்களுக்கு விசா வழங்கியது சீனா!
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!
-
வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
Advertisement
Advertisement