பிராமணர் சங்க கிளைக்கூட்டம்

கடலுார்; கடலுார் கூத்தப்பாக்கத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்க கிளையின் பொதுக்குழு கூட்டம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கப்படனம் நடந்தது.

கூட்டத்திற்கு ராஜாராமன் தலைமை தாங்கினார். ராமகிருஷ்ணன் வரவேற்றார். சங்கரன், லட்சுமணன், ராமநாதன், பாலகுரு, ஸ்ரீமதி, அலமேலு, ஜெயந்தி முன்னிலை வகித்தனர். 2024-25ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கை, கணேசன் வாசித்தார். பிரணதார்த்திஹரன் ஆண்டறிக்கை வாசித்தார். நடராஜர், பஞ்சாங்கப்படனம் வாசித்தார். கோடை வெய்யிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர்மோர் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

நிர்வாகிகள் சம்பத், லட்சுமிநாராயணன், சந்திரசேகரன், பக்தவச்சலம், பாலகுரு, ஸ்ரீவத்சன், வித்யா, சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர். வினோத் நன்றி கூறினார்.

Advertisement